Jan 21, 2026
Thisaigal NewsYouTube
பெக்க B40 திட்டத்தில் 10 லட்சம் பேர் பயன் பெற்றனர்
தற்போதைய செய்திகள்

பெக்க B40 திட்டத்தில் 10 லட்சம் பேர் பயன் பெற்றனர்

Share:

கடந்த ஏப்ரல் மாதம் B 40 தரப்பை சேர்ந்தவர்களுக்காக தொடங்கப்பட்டபெக்க B40 எனும் ஸ்கிம் பெடூழி சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தொற்றாத நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனை மூலம் சுமார் பத்து லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
தங்களை பரிசோதனை செய்து கொண்டவர்களின் 40 விழுக்காட்டினர் மேற்கொண்டு, தொடர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்ற சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பெக்க B40 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரை 5 லட்சத்திற்கும் அதிகமான பெக்க B40 பயனாளிகள், 11 கோடி வெள்ளி மதிப்பிலான 60,000 சுகாதார உதவிகளை பெற்றுள்ளனர். இதில் இலவச சுகாதார உபகரணங்களும் அடங்கும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் மொத்தம் 7 ஆயிரம் பெக்க B40 பயனாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெறும் வகையில் உதவித் தொகையையும், 12,000 பேர், போக்குவரத்துக்கான உதவித் தொகையையும் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொற்றாத நோய்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு, உடல் பருமன், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கான காரணிகளை இத்தகைய இலவச பரிசோதனை வாயிலாக B 40 தரப்பை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்து இருப்பதாகடாக்டர் ஜாலிஹா முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்