Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பெக்க B40 திட்டத்தில் 10 லட்சம் பேர் பயன் பெற்றனர்
தற்போதைய செய்திகள்

பெக்க B40 திட்டத்தில் 10 லட்சம் பேர் பயன் பெற்றனர்

Share:

கடந்த ஏப்ரல் மாதம் B 40 தரப்பை சேர்ந்தவர்களுக்காக தொடங்கப்பட்டபெக்க B40 எனும் ஸ்கிம் பெடூழி சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தொற்றாத நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இலவச மருத்துவப் பரிசோதனை மூலம் சுமார் பத்து லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
தங்களை பரிசோதனை செய்து கொண்டவர்களின் 40 விழுக்காட்டினர் மேற்கொண்டு, தொடர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்ற சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பெக்க B40 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரை 5 லட்சத்திற்கும் அதிகமான பெக்க B40 பயனாளிகள், 11 கோடி வெள்ளி மதிப்பிலான 60,000 சுகாதார உதவிகளை பெற்றுள்ளனர். இதில் இலவச சுகாதார உபகரணங்களும் அடங்கும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் மொத்தம் 7 ஆயிரம் பெக்க B40 பயனாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெறும் வகையில் உதவித் தொகையையும், 12,000 பேர், போக்குவரத்துக்கான உதவித் தொகையையும் பெற்றுள்ளனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொற்றாத நோய்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு, உடல் பருமன், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கான காரணிகளை இத்தகைய இலவச பரிசோதனை வாயிலாக B 40 தரப்பை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்து இருப்பதாகடாக்டர் ஜாலிஹா முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி