May 14, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.15-

கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை, இப்போதைக்கு முன்னுரிமையான விவகாரமாகப் பார்க்க வேண்டியதில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசகர் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் லாய் சென் ஹெங் வலியுறுத்தியுள்ளார்.

ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பதைக் காட்டிலும், நாட்டின் தலைநகராக விளங்கும் கோலாலம்பூர் மாநகரை நிபுணத்துவ முறையில் நிர்வகிப்பதற்கான நிர்வாக முறையில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் மைமூனா ஷாரிஃப், திடீரென்று பணியிடம் மாற்றப்பட்டது, மாநகர் மன்றத்தின் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையைக் காட்டுகிறது. எனவே ஊராட்சி மன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் மாநகர் மன்றத்தின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று லாய் சென் ஹெங் வலியுறுத்தினார்.

Related News

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்