Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.15-

கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை, இப்போதைக்கு முன்னுரிமையான விவகாரமாகப் பார்க்க வேண்டியதில்லை என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசகர் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் லாய் சென் ஹெங் வலியுறுத்தியுள்ளார்.

ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பதைக் காட்டிலும், நாட்டின் தலைநகராக விளங்கும் கோலாலம்பூர் மாநகரை நிபுணத்துவ முறையில் நிர்வகிப்பதற்கான நிர்வாக முறையில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் மைமூனா ஷாரிஃப், திடீரென்று பணியிடம் மாற்றப்பட்டது, மாநகர் மன்றத்தின் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையைக் காட்டுகிறது. எனவே ஊராட்சி மன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் மாநகர் மன்றத்தின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று லாய் சென் ஹெங் வலியுறுத்தினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் இப்போதைக்கு அவசியமில்லை | Thisaigal News