கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தன், சென்ரல் பகுதியில் உள்ள KTV நகைக்கடையில் நேற்று காலையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் 9.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் கொள்ளையிட ப்பட்டது தொடர்பில் 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதேவேளையில் கொள்ளையர்களின் நடமாட்டத்தைக் கண்டறிய அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை கடையின் உரிமையாளர் மற்றும் 10 ஊழியர்கள் உட்பட மொத்தம் 12 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண், வேறொருவருக்குச் சொந்தமான உண்மையான பதிவு எண் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில், நிசான் அல்மேரா காரில் வந்த துப்பாக்கி ஏந்திய நான்கு நபர்கள், பாதுகாவலர்களை அச்சுறுத்தி இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டனர்.
இதில் நகைக்கடையின் பாதுகாவலர் கொள்ளையார்களால் தாக்கப்பட்டுள்ளார்.








