May 22, 2026
Thisaigal NewsYouTube
கமிஷன் தொகையை பிரிந்துக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

கமிஷன் தொகையை பிரிந்துக் கொண்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூன் 21-

உள்ளூர் வங்கி ஒன்றில் நிரந்தர சேமிப்பு கணக்கிலிருந்து 2 கோடியே 42 லட்சம் வெள்ளி காணாமல் போன சம்பவத்தில் இந்த மோசடி வேலைக்கு உடந்தையாக இருந்தவர்கள், தாங்கள் ஆற்றிய பணிக்கு ஏற்ப கமிஷன் தொகையை பகிர்ந்து கொண்டுள்ளர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.

மோசடிக்கு உடந்தையாக இருந்த அனைவரும் தலா ஒரு லட்சம் வெள்ளி முதல் 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி வரை பெற்றுக்கொண்ள்ளனர் என்று வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

.இந்த மோசடியில் எட்டு ஆண்கள், ஆறு பெண்கள் என மொத்தம் 14 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 14 பேரில் 4 வங்கி ஊழியர்களும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News