கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கடத்தல் மோசடி தொடர்பில் போலீசார் நான்கு புகார்களை பெற்றுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஸாம் அப்துல் சுகூர் தெரிவித்தார்.
மாணவர் கடத்தப்பட்டதாக பொய்யான அழைப்பை விடுத்து பிணைப்பணம் கோரி மிரட்டும் அனாமதேய தொலைபேசி அழைப்பு தொடர்பில் போலீசார் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கு சென்ற தனது மகன் கடத்தப்பட்டதாக கோரி பிணைப்பணம் கோரி நபர் ஒருவரிடமிருந்து அனாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்றை குடும்பமாது பெற்றுள்ளார். பதறிப் போன அந்த மாது, தமது மகனின் நிலை குறித்து பள்ளியில் விசாரித்துப் பார்த்ததில் அந்த மாணவன் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அந்த அனாமதேய தொலைபேசி அழைப்பை அந்த மாது துண்டித்து விட்டதாக ஏசிபி அமிஹிஸாம் தெரிவித்தார். இது குறித்து தாங்கள் தீவிரமாக புலன்விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


