கோலாலம்பூர், டிச.3-
மலேசிய பூப்பந்து சங்கமான BAM, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு இலக்காகியுள்ளது. தாங்கள் SPRM விசாரணைக்கு ஆளாகியிருப்பதை அச்சங்கம் உறுதி செய்துள்ளது.
கோலாலம்பூர் உள்ள மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் காணப்பட்ட SPRM அதிகாரிகள், குறிப்பிட்ட தகவலை பெறுவதற்கு முனைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய குற்றச்சாட்டு இருந்தாலும் SPRM மேற்கொள்ளும் விசாரணைக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.








