ஜன.10
டிஏபி புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி ஆலோசகருமான ஙெ கூ ஹாம் மின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக நம்பப்படும் நபர்களுக்கு எதிராக போலீசார் தீவிர கைது வேட்டையைத் தொடங்கியுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் தெரிவித்தார்.
பேரா, மன்ஜுங், அருகில் அயெர் தாவார், தாமான் செமாராக் ஜெயாவில் உள்ள ஙெ கூ ஹாம் வீட்டில் இன்று புதன்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில்ஙெ கூ ஹாம் மற்றும் அவரின் மனைவி உயிர்தப்பியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக அதிகாலை 2.55 மணியளவில் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙெ கூ ஹாம்மிடமிருந்து ஆயர் தாவார் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக முஹமாட் யுஸ்ரி குறிப்பிட்டார்.
குற்றவியல் சட்டம் 435 பிரிவின் கீழ் இச்சம்பவம் தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். .








