Sep 7, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் - பேராக் வனப்பகுதி மலையேற்றம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், 2 வழிக்காட்டிகள் மாயம்
தற்போதைய செய்திகள்

கிளந்தான் - பேராக் வனப்பகுதி மலையேற்றம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், 2 வழிக்காட்டிகள் மாயம்

Share:

கிளந்தான்–பேராக் மாநிலங்களுக்கு இடையிலான வனப்பகுதியில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் இரண்டு மலை வழிகாட்டிகள் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகின்றது.

குவா மூசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாக கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வனப்பகுதிக்குள் சென்ற அவர்கள், திட்டமிட்டபடி செப்டம்பர் 3-ஆம் தேதி பேராக்கில் உள்ள போஸ் கெமார் வழியாக வெளியேறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மலையேற்றக் குழுவினர் குறிப்பிட்ட தேதியில் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் இன்று சிலாங்கூரில் போலீஸ் புகார் அளித்துள்ளதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் கடைசியாக பேராக் மாநில வனப்பகுதியில் இருந்த போது தொடர்பில் இருந்தது வனத்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பேராக் அதிகாரிகளிடம் இருந்து உறுதியான தகவலைப் பெற முயற்சித்து வருவதாகவும் சிக் சூன் ஃபூ குறிப்பிட்டுள்ளார்.

Related News

காஜாங்கில் கார் துரத்தல் விபத்தில் முடிந்தது - போதைப்பொருளுடன் பெண் கைது, ஓட்டுநர் தப்பியோட்டம்

காஜாங்கில் கார் துரத்தல் விபத்தில் முடிந்தது - போதைப்பொருளுடன் பெண் கைது, ஓட்டுநர் தப்பியோட்டம்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது