Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டன
தற்போதைய செய்திகள்

ஒன்பது குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச்.23-

நேற்று, கோலாலம்பூரில் உள்ள செகாம்பூட் பகுதியில் வெளிநாட்டினரின் குடியேற்றத்தை ஒடுக்குவதற்கான ஓப்ஸ் செரோபோ நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒன்பது குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன. அரச மலேசியக் காவல் படை தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மலேசிய குடிநுழைவு துறையும் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் ஆகியவையும் ஈடுபட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிபிகேஎல் வெளியிட்ட தகவலின்படி, குறிப்பிட்ட இடங்களில் நடத்திய விசாரணையில், ஒன்பது சட்டவிரோத குடிசைகளும் மரக்கட்டையாலும் பயன்படுத்தப்பட்ட பொருட்களாலும் கட்டப்பட்டக் குடிசைகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டது தெரியவந்தது. மேலும், ஒவ்வொரு குடியிருப்புக்கும் இயற்கையான நீர் விநியோகங்கள் கிடைத்துள்ளன. ஆனால் அந்தப் பகுதியில் மின்சாரம் இல்லை என்று டிபிகேஎல் கூறியது. இதன் விளைவாக, 1974 ஆம் ஆண்டு சாலைகள், வடிகால்கள், கட்டடங்கள் சட்டத்தின்படி அனைத்து கட்டமைப்புகளும் இடிக்கப்பட்டன. இடிக்கப்பட்ட அனைத்து கழிவுகளும் நடவடிக்கை முடிந்த பிறகு டிபிகேஎல் மூலம் அகற்றப்பட்டன. இந்த நடவடிக்கையில், மலேசிய குடிநுழைவு துறை ஆறு வெளிநாட்டினரைக் கைது செய்தது.

Related News

2030-ஆம் ஆண்டிற்க்குள் நாடு முழுவதும் 1,000 மடானி பொழுதுபோக்கு பூங்காக்கள்

2030-ஆம் ஆண்டிற்க்குள் நாடு முழுவதும் 1,000 மடானி பொழுதுபோக்கு பூங்காக்கள்

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்