Jul 4, 2026
Thisaigal NewsYouTube
சிறுவன் திஷாந்த் தாயார் உடல் நிலை சீராக உள்ளது
தற்போதைய செய்திகள்

சிறுவன் திஷாந்த் தாயார் உடல் நிலை சீராக உள்ளது

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.30-

தனது ஒரே மகன் திஷாந்த் கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்டு, மீள முடியாதத் துயரத்திற்கு ஆளாகி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்தச் சிறுவனின் 30 வயது தாயார், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.

அந்த மாதுவின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று முகமட் சொஹைமி குறிப்பிட்டார்.

தனது மகனின் இறப்புச் செய்தியைக் கேட்டு, பிரம்மைப் பிடித்தவரைப் போல் காணப்பட்ட அந்த மாது, மகனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ள தற்கொலை முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

எனினும் அந்த மாது காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை முகமட் சொஹைமி இஷாக் உறுதிப்படுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது