Mar 14, 2026
Thisaigal NewsYouTube
செந்தூலில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சூதாட்ட மையம் முடக்கம்: 5 பேர் கைது
தற்போதைய செய்திகள்

செந்தூலில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சூதாட்ட மையம் முடக்கம்: 5 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.03-

கோலாலம்பூர், ஜாலான் செந்தூல் பசாரில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த, சிறிய சூதாட்ட மையமானது நேற்று போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் கண்டறியப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அந்த சூதாட்ட மையத்தில் இருந்த 23 முதல் 42 வயதுடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 3 மலேசியர்களும், 1 கனடா நாட்டைச் சேர்ந்தவரும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர், அந்த சூதாட்ட மையத்தின் நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அவ்விடத்தில் சூதாட்டம் நடத்துவதற்குத் தேவையான அட்டைகள், போக்கர் டேபிள்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related News