Dec 3, 2025
Thisaigal NewsYouTube
50 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நிறுவன இயக்குநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

50 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நிறுவன இயக்குநர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.01-

50 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக நிறுவன இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

39 வயது P. குகன் அருணாச்சலம் என்ற அந்த நிறுவன இயக்குநர், அறக்கட்டணை மற்றும் மேலாண்மை நிறுவனமான யுபிபி அமானா பெர்ஹாட் மீது மலேசிய பங்குப் பத்திர ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 50 மில்லியன் ரிங்கிட் லஞ்சத்தைக் கோரியதாகக் குற்றம் சுமத்தப்பட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் தேதி கோலாலம்பூர், பங்சார், ஜாலான் பங்குங்கில் உள்ள ஓர் உணவகத்தில் குகன் அருணாச்சலம் இக்குற்றத்தைப் புரிந்தததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ண்டு சிறை மற்றும் பெறப்பட்ட லஞ்சத் தொகைக்கு நிகராக ஐந்து மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் குகன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்