வரும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது தலைமையிலான வாரிசான் கட்சி, மாநில அம்னோவுடன் ஒத்துழைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் முஹமாட் ஷஃபி அப்டால் அறிவித்துள்ளார்.
சபா மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த வாரிசான் கட்சியும், அம்னோவும் மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒத்துழைப்பான முன்னோட்டத்தை அறிவித்து விருப்பது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
சபாவின் ஆளும் கட்சியான சபா மக்கள் கூட்டணி ஜிஆர்எஸ் – யை வீழ்த்துவதற்கு அம்னோவுடன் தமது வாரிசான் கட்சி இணையவிருப்பதாக அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரான ஷஃபி அப்டால் அறிவித்துள்ளார்.








