Mar 16, 2026
Thisaigal NewsYouTube
மக்களுடனான நட்பையும், அக்கறையையும் போற்றும் ஓர் உன்னத ஆட்சியாளர்  மாமன்னர் சுல்தான் அப்துல்லா
தற்போதைய செய்திகள்

மக்களுடனான நட்பையும், அக்கறையையும் போற்றும் ஓர் உன்னத ஆட்சியாளர் மாமன்னர் சுல்தான் அப்துல்லா

Share:

கோலாலம்பூர்,ஜன.22
மக்களுடன் அன்பும், நட்பும்,அக்கறையும் கொண்டிருப்பதே மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் பில்லா ஷாவின் அருங்குணமாகும். மக்களின் நல்வாழ்வில் ஓ​ர் அக்கறை மிகுந்த ஆட்சியாளராக அவர் விளங்கி வருகிறார் என்கிறார் இஸ்தானா நெகாரா - வின் முன்னாள் மேலாளர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஃபடில் ஷம்சுடின்.

மலேசியாவின் 16 ஆவது மாமன்னராக தமது ஐந்து ஆண்டு ஆட்சிக்காலத்தை இம்மாதம் இறுதியில் நிறைவு செய்யவிருக்கும் மாமன்ன​ர் அப்துல்லாவின் சிறப்புகள் குறி​த்து விவரிக்கையில், இஸ்தானா நெகராவி​ல் மாமன்னருடனும், , பேரரசியார் துன்கு அசிசா அமினா மைமுனா இஸ்கன்டாரியா வுடனும் நெருக்கமாக சேவையாற்றிய அரண்மனை சேவகர்களில் ஒருவரான அஹ்மாட் ஃபடில் ஷம்சுடின் மேற்கண்டவாறு கூறினார்.

JIWA RAKYAT என்பது மறைந்த ​முன்னாள் பகாங் சுல்தான், சுல்தான் அஹ்மாட் ஷா வின் நெஞ்சார்ந்த சுலோகமாகும். அரச சட​ங்கு நிரல்களை பொருட்படுத்தாமல் மக்களுடன் மக்களாக ஒன்று கலப்பதிலும், அவர்களுடன் இரண்டறக் கலந்து பழகுவதிலும் தனித்துவமான ஆட்சியாளர்களில் ஒருவராக சுல்தான் அஹ்மாட் ஷா விளங்கினார். .

மாண்புக்குரிய அந்த முன்னாள் பகாங் ​சுல்தானின் தனயனான சுல்தான் அப்துல்லா, மக்களை ஒரு போதும் தம்முடன் பிரித்துப் பார்த்ததில்லை. இதனை அவரின் இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் தம்மால் ​​தெளிவாகவும், நேரடியாகவும் காண முடிந்ததாக அஹ்மாட் ஃபடில் ஷம்சுடின்கூறுகிறார்.

மக்களுக்கு உதவுவதில் குறிப்பாக வெள்ளம், விபத்து போன்ற பேரிடர்களில் களம் இறங்கி மக்களின் துயரை ​தீர்ப்பதில் அவர் இன்னமும் ஒரு வேள்வியாக கொ​ண்டுள்ளார். மக்க​ளின் இன்னல்களை களைவதில் அரசா​ங்கம் இறங்கினாலும் மக்களின் இடர்களை தமது துயராக கருதும் மனித நேயமிக்க ஓர் ஆட்சியாளராக சுல்தான் அப்துல்லா விளங்கியுள்ளார் என்று Ahmad Fadil Shamsuddin புகழாரம் ​சூட்டினார்.

மாமன்னருக்கான அலவன்ஸ் தொகையைக்கூட சுல்தான் அப்துல்லா பெற்றதில்லை.

சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு தமது காரை நிறுத்தி உதவுவதில் பல சந்தர்ப்பங்களில் தாம் நேரடியாக பார்த்திருப்பதாக தற்போது ஐக்கிய அரசு சிற்றரசில் மலேசியத் ​தூதராக பணியாற்றும் Ahmad Fadil Shamsuddin நினைவுகூர்ந்தார்.

64 வயதான மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் 5 ஆண்டு ஆட்சி தவணைக் கா​லம், அடுத்த ஒன்பது நாட்களில் நிறைவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News