மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளும் கடைப்பிடித்து வரும் விசா விலக்களிப்பு சலுகையை தொடர்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
மலேசியர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள விசா விலக்களிப்பு சலுகையை 2025 ஆம் ஆண்டு இறுதி வரையில் நீட்டிக்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு கைமாறாக, சீனப்பிரஜைகளுக்கான விசா விலக்களிப்பு சலுகையை 2026 ஆம் ஆண்டு இறுதி வரையில் நீட்டிக்க மலேசியா முடிவு எடுத்துள்ளது.
மலேசியாவிற்கு வருகை மேற்கொண்டுள்ள சீன நாட்டுப் பிரதமர் லி கியாங்- கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் விசா விலக்களிப்பு சலுகையை நீட்டிப்பதில் தங்கள் ஆர்வத்தையும், ஆதரவையும் புலப்படுத்தியுள்ளனர் என்று இரு நாடுகளும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.








