May 26, 2026
Thisaigal NewsYouTube
9 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும்
தற்போதைய செய்திகள்

9 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும்

Share:

டிச. 22-

புதிதாக நடப்புக்கு வந்த SSPA எனப்படும் பொது சேவை ஊதிய முறையின் கீழ் இறுதிச் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய விகிதங்களை சரிசெய்வது 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த அறிவிப்பு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமால் வெளியிடப்பட்டது. இந்த சரிசெய்தல் ஓய்வூதியதாரர்களின் கவலைகளைக் குறைக்கும் என்று அரசு – தனியார் துறை பணி ஓய்வு பெற்றவர்கள் சங்கமான Pejasma வின் தலைவர் Datuk Azih Muda கருத்துரைத்துள்ளார்.

4 முதல் 8 விழுக்காடு வரை ஓய்வூதியத்திற்கான மறு சீரமைப்பு இருக்கும். நிர்வாகப் பிரிவினருக்கு 8 விழுக்காடு உயர்வும், உயர் நிர்வாகத்திற்கு 4 விழுக்காடு உயர்வும் இருக்கும். 2012 இல் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் 8 விழுக்காடு உயர்வு அடிப்படையில் கணக்கிடப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்கள் கூடுதல் தொகை பெறுவார்கள். எடுத்துக் காட்டாக, முன்பு 2000 ரிங்கிட் பெற்றவர் இப்போது 2,200 ரிங்கிட் பெறுவார் என Datuk Azih Muda சுட்டிக் காட்டினார்

ஓய்வூதியதாரர்களின் நலனைக் காக்கும் முயற்சியில் PKKP எனப்படும் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு வெகுமதி தொடர்ந்து வழங்கப்படும் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்த முடிவு கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு