பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மிக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவர் இறந்து விட்டதைப் போல தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நபர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட நபர், தமது கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்பட்ட போதிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு எதிராக தவறான தகவலை பரப்பியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபர், ஹாடி அவாங்கிற்கு எதிராக ஏற்படுத்திய அவதூறான தகவலைப் போலவே முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு எதிராகவும் ஒரு கருத்தை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ள ஹாடி அவாங்கின் உடல் நிலை குறித்து அவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பிரதமர் நலம் விசாரித்துள்ளார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


