பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மிக கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவர் இறந்து விட்டதைப் போல தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த நபர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட நபர், தமது கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்பட்ட போதிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு எதிராக தவறான தகவலை பரப்பியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபர், ஹாடி அவாங்கிற்கு எதிராக ஏற்படுத்திய அவதூறான தகவலைப் போலவே முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு எதிராகவும் ஒரு கருத்தை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ள ஹாடி அவாங்கின் உடல் நிலை குறித்து அவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பிரதமர் நலம் விசாரித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


