40 வயதுடைய தொழிற்சாலை ஊழியர் ஒருவர் மோசடி கும்பலிடம் 87,400 வெள்ளியை இழந்தார். அந்நபர் குறுகிய காலத்திற்குள் அதிக லாபத்தை ஈட்டமுடியும் என்று நம்பி பெரும் தொகையை இழந்திருப்பதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார். கடந்த மே 4 ஆம் திகதி ஸ்தோக் மார்கெட் ஸ்தேபல் ப்ரோஃபிட் ப்ரெக்டிக்கல் ட்ரேய்னிங் கேம்ப் எனும் புலனக்குழுவின் மூலம் தமக்கு முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார். இதன் காரணமாக கடந்த ஜூன் 12 முதல் அவர் முதலீடு செய்ய தொடங்கியுள்ளார். மிக குறுகிய காலத்திற்குள் அவரது ஆரம்ப முதலீடான 63,400 வெள்ளி கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதாவது 180,000 வெள்ளி ஆக உயரும் என்று அந்த கும்பல் நிர்வாகியால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்நபர் பணத்தை திரும்ப பெற விரும்பிய போது கட்டணமாக 24,000.90 வெள்ளி அவரிடம் கோரப்பட்டதாக ரஹ்மாட் கூறினார். அதன்படி பணத்தை செலுத்திய பின் அந்நபர் புலனக்குழுவிலிருந்து நீக்கப்பட்டத்துடன் தடை செய்யப்பட்டதாகவும் ரஹ்மாட் தெரிவித்தார். பிறகு, தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதை எண்ணி போலீஸ் புகார் செய்துள்ளார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


