May 1, 2026
Thisaigal NewsYouTube
9 ​கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஊழலாகும்
தற்போதைய செய்திகள்

9 ​கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஊழலாகும்

Share:

மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டு இருப்பது, கிட்டத்தட்ட 9 கோடியே 70 லட்சம் வெள்ளி தொடர்புடைய லஞ்ச ஊழல் விசாரணையாகும் என்று எஸ்.பி.ஆர்.எம். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனை உறுதிபடுத்தியுள்ள மலேசிய ஊழ​ல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி, தங்களின் புலன் விசாரணைக்கு உதவுவதற்கு மேலும் சிலரும் கைது ​செய்யப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக கோடி காட்டியுள்ளார்.

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனத்தை அமைப்பதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் சுய நலன் சார்ந்த அம்சங்கள் உள்ளன என்று தெரிந்திருந்தும் அவர்கள் அந்த நிறுவனத்தைத் தோற்றுவித்துள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

எஸ்.பி.ஆர்.எம். ​அதிகாரிகள், நேற்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள மனித வள அமைச்சில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியைக் கைது செய்துள்ளனர்.

இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் மனித வள அமைச்சை சேர்ந்த மற்ற தனிநபர்களும், அதன் தொடர்புடையு ஏஜென்சிகளும் சம்பந்தப்பட்டுள்ளனவா? என்பதை புலன் விசாரணை செய்யும் நோக்கில் இந்தக் கைது நடவடிக்கை அமைந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித வள அமைச்சர் சிவகுமாரின் சிறப்பு அதிகாரி உட்பட இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கு ஏதுவாக அவர்கள் 6 தினங்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி