May 20, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநில அளவிலான தீபாவளி உபசரிப்பு
தற்போதைய செய்திகள்

பேரா மாநில அளவிலான தீபாவளி உபசரிப்பு

Share:

பேரா மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு நாளை நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1.00 மணிக்கு தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின் ஸ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

முதல் முறையாக தென் பேராக், முவாலீம் மாவட்டத்தில் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பேரா மாநில சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா - வும், அவரின் துணைவியாரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், டத்தோ , ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவனேசன் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருக்கும் இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பொது மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related News