May 6, 2026
Thisaigal NewsYouTube
நீதிக்கோரி பாதிரியாரின் மனைவி கடிதம்
தற்போதைய செய்திகள்

நீதிக்கோரி பாதிரியாரின் மனைவி கடிதம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.06-

ஒரு பாதிரியரான ரேய்மண்ட் கோ, மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து நீதித்கோரி அவரின் மனைவி லியூ, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிற்குத் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தமது கணவர் காணாமல் போனது குறித்து போலீசாரும் அரசாங்கமும் பெரும் தொகையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் தமது கணவருக்கு உண்மையிலேயே என்ன நடந்தது, எத்தகைய தீங்கு இழைக்கப்பட்டது, அவர் எங்கே போன்ற கேள்விகள் மனக்கிடங்கில் கேள்விக் கணைகளாக உள்ள நிலையில் தங்கள் குடும்பத்திற்கு கோபிந்த் சிங் ஆதரவாக இருந்து, உதவ வேண்டும் என்று லியூ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, தனது கணவர் ரேய்மண்ட் கோ, காணாமல் போன தினத்திலிருந்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் நாள் வரை ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் ரிங்கிட் வீதம் இழப்பீடு என்று கணக்கிடப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.

ஆனால், ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட தனது கணவருக்கு உண்மையிலே என்ன நேர்ந்தது என்பது அமைச்சர் கோபிந்த் சிங் ஆராய வேண்டும் என்று லியூ தனது திறந்த மடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்