Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

Share:

பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கையம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம், நாளை மறுநாள் நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நாளை நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்கள் மூல விக்கிரத்திற்கு எண்ணெய் சாத்துதல் நிகழ்வு நடைபெறும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீ மகா துர்க்கையம்மன் விமான திருக்குட நன்னீராட்டு பெருவிழா, தமிழகம், கும்பகோணம், பட்டிஸ்வரர் கோயில் சிவச்சாரியார் பாபு குருக்கள், தேவஸ்தானத்தின் இதர குருக்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ துர்க்கையின் அருளை பெற்று உய்யுமாறு தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு