கேமரன்மலை சாலையில் சிம்பாங் புலாய்க்கும், புலு வேலிக்கும் இடையில் கனத்த மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. . நேற்று இரவு 11.25 மணியளவில்(FT) 185 செக்ஷன் 45 இல் இந்த நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது வரையில் தாங்கள் மேற்கொண்ட சோதனையில் இந்த நிலச்சரிவு சம்பவத்தில் எந்தவொரு வாகனமும் சிக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக பேரா மாநில தொடர்புத்துறை கட்டமைப்பு, எரிசக்தி, நீரவளம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ செரி மொஹமாட் நிசார் ஜலாலுடின் தெரிவித்துள்ளார்.
கனத்த மழையின் காரணமாக மலையில் வழிந்தோடிய நீரின் வேகத்தினால் இந்த நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டு இருந்த அந்த சாலை இன்று அதிகாலை 4.45 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மொஹமாட் நிசார் தெரிவித்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


