ஜோர்ஜ்டவுன்,ஜன.11
பினாங்கு மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக தடைப்பட்ட குடிநீர் விநியோகம்,செபெராங் பெராய்யில் உள்ள மூன்று பிரதான மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணி வரையில் செபெராங் பெராய் உத்தாரா, செபெராங் பெராய் தெங்ஙா ஆகிய .இரண்டு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் நூறு விழுக்காடு வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யொ தெரிவித்தார்.
எனினும் செபெராங் பெராய் செலாத்தான் மாவட்டத்தில் மட்டுமே குடிநீர் விநியோகம் 60 விழுக்காடு வரை வழக்க நிலைக்கு திரும்பியிருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.








