கடந்த 18 ஆண்டுகாலமாக டிஏபி-யில் ஓர் உறுப்பினராக இருந்து வரும் பினாங்கு துணை முதல் அமைச்சரும், முன்னாள் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பி.ராமசாமி அக்கட்சியில் இருந்து விலகவிருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு டிஏபியில் ஓர் உறுப்பினராக தன்னைப் பிணைத்துக் கொண்ட டாக்டர் ராமசாமி, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அக்கட்சியை விட்டு விலகலாம் என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் பிறை சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் அலுவலகத்தில் நாளை வியாழக்கிழமை டாக்டர் ராமசாமி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


