Jun 15, 2026
Thisaigal NewsYouTube
தமது வருகையை கண்டு பயப்பட வேண்டியதில்லை
தற்போதைய செய்திகள்

தமது வருகையை கண்டு பயப்பட வேண்டியதில்லை

Share:

DAP யில் தமது வருகையை கண்டு கட்சியில் உள்ளவர்கள் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்று அக்கட்சியின் புதிய செனட்டராக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் Dr லிங்கேஸ்வரன் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
DAP யில் ஓர் உறுப்பினராக இணைந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகின்றன நிலையில் தம்மை செனட்டராக நியமித்துள்ள கட்சியின் முடிவு குறித்து கட்சியில் உள்ள சில தரப்பினர் கேள்வி எழுப்பிய போதிலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் தாம் மதிப்பதாகவும், தமது சேவைத்திறனை மதிப்பீடு ​செய்யுமாறும் பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் இயக்குநரான டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

மஇகாவின் மூத்த அரசியல்வாதியான பினாங்கு, பட்டர்வொர்த் டத்தோஸ்ரீ ஆர். அருணாசலத்தின் புதல்வரான 36 வயதான டாக்டர் லிங்கேஸ்வரன், பினாங்கு மாநில ஜசெக சார்பில் செனட்டராக நியமிக்கப்பட்டதை பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தற்காத்துப் பேசியுள்ளார். பினாங்கு மருத்துவமனையில் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்துள்ள டாக்டர் லிங்கேஸ்வரன், DAP யில் ஓர் உறுப்பினராக இணைந்து இருப்பதை கட்சி நல்வரவாக பார்க்கிறது என்று தெரிவித்து இருந்தார்.
பினாங்கு சுகாதார​த்துறை சேவையில் தாம் கொண்டுள்ள நிபுணத்துவத்தை கட்சியின் வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்தப் போவதாக உறுதி அளித்த 36 வயதான டாக்டர் லிங்கேஸ்வரன், DAP யில் இந்தியர்களை பிரதிநிதிப்பதற்கு மிகச் சிறந்த கல்விமானாக போற்றப்படுகிறார்.

டாக்டர் லிங்கே​ஸ்வரன், ஆஸ்திரேலியா, New South Wales பல்லைக்கழகத்தில் மருத்துவத்துறை நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆவார்.
வரும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு டாக்டர் லிங்கேஸ்வரனை மாநில துணை அமைச்சராக கொண்டு வருவதற்கு DAP ​திட்ட​​மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. DAP யில் இந்தியர்களை பிரதிநிதிக்க​க்கூடிய ஒரு கல்விமான் என்பதை மக்களிடம் அறிமுகப்படுத்தவே அவருக்கு செனட்டர் பதவியை கட்சி வழங்கியுள்ளதாக கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்