கட்சி விட்டு கட்சி மாறினால், ஒரு கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி விதித்துள்ள நிபந்தனைக் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரைடா கமாருடீன் கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள், ஒரு பாரத்தை வழங்கி தம்மை கையெழுத்திட சொன்னதால் அந்தப் பாரத்திலுள்ள உள்ளடக்கத்தைத் தாம் படிக்கவில்லை என்றும், தமக்கு விளக்கப்படவில்லை என்றும் 65 வயதுடைய முன்னாள் அமைச்சரான சுரைடா குறிப்பிட்டார்.
அம்பாங் எம்.பி. யாக இருந்தப்போது பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பெர்சத்துவில் இணைந்தது தொடர்பில், ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கேட்டுத் தமக்கு எதிராக அக்கட்சித் தொடுத்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்கையில் சுரைடா இதனை தெரிவித்தார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


