கட்சி விட்டு கட்சி மாறினால், ஒரு கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி விதித்துள்ள நிபந்தனைக் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரைடா கமாருடீன் கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள், ஒரு பாரத்தை வழங்கி தம்மை கையெழுத்திட சொன்னதால் அந்தப் பாரத்திலுள்ள உள்ளடக்கத்தைத் தாம் படிக்கவில்லை என்றும், தமக்கு விளக்கப்படவில்லை என்றும் 65 வயதுடைய முன்னாள் அமைச்சரான சுரைடா குறிப்பிட்டார்.
அம்பாங் எம்.பி. யாக இருந்தப்போது பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பெர்சத்துவில் இணைந்தது தொடர்பில், ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கேட்டுத் தமக்கு எதிராக அக்கட்சித் தொடுத்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்கையில் சுரைடா இதனை தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


