கட்சி விட்டு கட்சி மாறினால், ஒரு கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி விதித்துள்ள நிபந்தனைக் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரைடா கமாருடீன் கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள், ஒரு பாரத்தை வழங்கி தம்மை கையெழுத்திட சொன்னதால் அந்தப் பாரத்திலுள்ள உள்ளடக்கத்தைத் தாம் படிக்கவில்லை என்றும், தமக்கு விளக்கப்படவில்லை என்றும் 65 வயதுடைய முன்னாள் அமைச்சரான சுரைடா குறிப்பிட்டார்.
அம்பாங் எம்.பி. யாக இருந்தப்போது பிகேஆர் கட்சியிலிருந்து விலகி பெர்சத்துவில் இணைந்தது தொடர்பில், ஒரு கோடி வெள்ளி இழப்பீடு கேட்டுத் தமக்கு எதிராக அக்கட்சித் தொடுத்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்கையில் சுரைடா இதனை தெரிவித்தார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


