Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பறி கொள்ளையனை போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

வழிப்பறி கொள்ளையனை போலீஸ் தேடுகிறது

Share:

ஷா ஆலம், அக்டோபர் 01-

கடந்த சனிக்கிழமை, ஷா ஆலாம், செட்டியா ஆலம் - மில் கார் விற்பனையாளர் ஒருவரின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்ட வழிப்பறி கொள்ளையன் ஒருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.14 மணியளவில் 29 வயதுடைய நபரிடமிருந்து போலீசார் புகார் பெற்று இருப்பதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

Yamaha 135 LC ரக மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன், ஒரு Mercedes Benz ரக காரை வேண்டுமென்றே மோதியுள்ளார். காரின், உரிமையாளர், காரில் ஏற்பட்ட சேதத்தைப் பார்ப்பபதற்காக காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கியுள்ளார்.

அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த கொள்ளையன், மோட்டார் சைக்கிளில் இருந்துவாறு மின்னல் வேகத்தில் அந்த நபரின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதாக ஏசிபி முகமது இக்பால் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் அந்த கார் உரிமையாளர் எவ்வித காயத்திற்கும் ஆளாகவில்லை என்று அவர் மேலும் கூறினார்

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி