Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஆடவர் கடலில் மூழ்கி மரணம்

Share:

போர்ட்டிக்சன், ஜன.30-

சீனப் புத்தாண்டு விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பதற்காக கிள்ளானைச் சேர்ந்த ஒரு தொழிற்சாலையின் ஊழியர்கள், நேற்று போர்ட்டிக்சன் கடற்கரையில் குளித்துக் கொண்டு இருந்த போது, அவர்களின் மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது.

தங்களுடன் வந்த பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் கடலில் மூழ்கி மரணம் அடைந்தது சகப் பணியாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் நேற்று நண்பகல் 12.20 மணியளவில் போர்ட்டிக்சன், பந்தாய் பத்து லீமாவில் நிகழ்ந்தது. இதில் 20 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் இளைஞர், மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமுற்றதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் மஸ்லான் ஊடின் தெரிவித்தார்.

கடலில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர், பந்தை எடுப்பதற்கு சிறிது தூரம் நீச்சல் அடித்தவாறு சென்று கொண்டிருந்த போது, நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

அவரின் உடல் பிற்பகல் 3.12 மணியளவில் மீட்புப்படையினால் கண்டு பிடிக்கப்பட்டதாக மஸ்லான் ஊடின் குறிப்பிட்டார்.

மூன்று பேருந்துகள் மூலம் அந்த தொழிற்சாலை ஊழியர்கள் கிள்ளானிலிருந்து போர்ட்டிக்சனுக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற அவர் குறிப்பிட்டார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை