Apr 19, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் 100 கோடி ரிங்கிட்  ஆவண  மோசடி கும்பல் பிடிபட்டது: சோதனை வேட்டையில் 9 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் 100 கோடி ரிங்கிட் ஆவண மோசடி கும்பல் பிடிபட்டது: சோதனை வேட்டையில் 9 பேர் கைது

Share:

சுமார் 6 மாத கால ரகசியப் புலனாய்விற்குப் பிறகு, கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கோலாலம்பூரின் ஆறு இடங்களில் குடிநுழைவுத் துறையினர் தீவிர சோதனைகளை நடத்தினர். இந்தச் சோதனைகளில் குடிநுழைவுத்துறை போலி ஆணவங்களை தயாரித்தல் மற்றும் மனித கடத்தல் தொடர்பில் 26 முதல் 61 வயதுக்குட்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 3 நேபாளிகள், 3 இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

இந்த மோசடிக் கும்பல் நடவடிக்கையில் ஒரு மலேசிய ஆடவர் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்ற வியட்நாமிய பெண் ஆகியோர் நிறுவன இயக்குநர்களாகச் செயல்பட்டுள்ளனர். இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்ட 43 வயது நேபாளியையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே 2016-ல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டவர் என்று டத்தோ ஜக்காரியா ஷாபான் குறிப்பிட்டார்.

2019 முதல் இயங்கி வரும் இந்தக் கும்பல், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முகவர்கள் என்று கூறி முதலாளிகளை ஏமாற்றியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இன்று புத்ரஜெயா, குடிநுழைவுத்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

• ஒவ்வொரு தொழிலாளிக்கும் 5,000 முதல் 6,000 ரிங்கிட் வரை வசூலித்துவிட்டு, போலியான ஆவணங்கள் மற்றும் அனுமதிச் சீட்டுகளான இ-பாஸ் அட்டைகளை வழங்கியுள்ளனர்.

• 7 ஆண்டுகளில் இவர்கள் சுமார் 100 மில்லியன் ரிங்கிட் வரை சம்பாதித்திருக்கலாம் எனத் தெரிகிறது டத்தோ ஜக்காரியா ஷாபான் குறிப்பிட்டார்.

சோதனையின் போது 111 வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள், 10 மடிக்கணினிகள், 6 கைபேசிகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. "வெளிநாட்டுத் தொழிலாளர் விண்ணப்பங்களுக்குத் குடிநுழைவுத் துறை எந்த முகவர்களையும் நியமிக்கவில்லை. எனவே, முதலாளிகள் அதிகாரப்பூர்வமற்ற நபர்களை அணுகி ஏமாற வேண்டாம்" என்று டத்தோ ஜக்காரியா ஷாபான் வலியுறுத்தினார்.

Related News

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!