May 18, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் கோவில் மற்றும் 21 வீடுகள் அழிந்தன
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் கோவில் மற்றும் 21 வீடுகள் அழிந்தன

Share:

ஈப்போ, ஜூன்.28-

பேரா, ஹூத்தான் மெலிந்தாங், பாகான் பாசீர் லாவுட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோவில் மற்றும் 21 வீடுகள் அழிந்தன.

இந்தத் தீச் சம்பவம் குறித்து அதிகாலை 4.50 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

தொடக்கத்தில் ஐந்து வீடுகளே தீப்பற்றிக் கொண்டதாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் நேரில் சென்ற போது 21 வீடுகளில் தீ சூழ்ந்து கொண்டது தெரிய வந்ததாக சபாரோட்ஸி நோர் குறிப்பிட்டார்.

தீயை அணைக்கும் பணியில் தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையத்துடன், சுங்கை தியாங்கில் உள்ள தொண்டூழிய வீரர்களும் ஈடுபட்டதாக அவர் விளக்கினார்.

தீணை அணைக்கும் பணி, காலை 7.30 மணிக்கு முழுமை பெற்றது. அழிந்த வீடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் சற்று சேதமுற்ற வீடுகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி