Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

குறுக்கோட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவன் உயிரிழந்தான்

Share:

சுங்கை பட்டாணி, பிப்.27-

கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன், மயங்கி விழுந்து மரணமுற்றான்.

இன்று காலையில் அப்பள்ளியில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் அந்த மாணவன் 6 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக முடித்த பின்னர் மயங்கி கீழே விழுந்தாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மாணவனுக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அந்த மாணவன் கொண்டு செல்லப்பட்டான்.

எனினும் மாணவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர் என்று கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸாருடின் வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு