கோலாலம்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வீடமைப்புத்திட்டங்களிலும் வாங்கத் தக்க வீடுகள் அல்லது பிபிஆர் வீடமைப்புத்திட்டடங்கள் கட்டாயமாக்கப்படும் கொள்கைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைநகரில் மக்கள் வாங்கத் தக்க வீடுகளை அதிகளவில் நிர்மாணிப்பதற்கு வகுக்கப்பட்ட இலக்கு, இன்னும் நிறைவேறவில்லை என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அதிக விலைகொடுத்து வீடுகளை வாங்க முடியாத நிலையில் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வாங்கத் தக்க வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அதன் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் ஆண்டொன்றுக்கு வாங்கத் தக்க அல்லது பிபிஆர் குடியிருப்புகளுக்கு வீடு கேட்டு சராசரி மூவாயிரம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆனால், கோலாலம்பூர் மாநகர் மன்றம் 300 வீடுகளை மட்டுமே வழங்கும் ஆற்றலை கொண்டு இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Related News

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு


