May 28, 2026
Thisaigal NewsYouTube
மனைவியைக் கொன்ற நபருக்கு 30 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

மனைவியைக் கொன்ற நபருக்கு 30 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், மார்ச்.27-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போர்வையைப் பயன்படுத்தி தனது மனைவியை மூச்சடைக்கக் செய்து, கொலை செய்த குற்றத்திற்காக குத்தகையாளர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

51 வயது சுவா சின் ஹோ என்ற அந்த குத்தகையாளர், தனது தற்காப்பு வாதத்தில் நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த நபர், பிடிபட்ட தினமான 2021 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி முனியாண்டி உத்தரவிட்டார்.

கடந்த மே 9 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கோலாலம்பூர், ஸ்தாபாக், ஜாலான் கெந்திங் கிளாங்கில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் 45 வயதுடைய லாவ் பீ ஹொங் என்ற தனது மனைவியைக் கொலை செய்ததாக அந்த குத்தகையாளர் குற்றவில் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்