Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இதுவரை 62.57 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

இதுவரை 62.57 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது

Share:

புற்றாஜெயா, செப்டம்பர்.12-

போலீசாருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையில் மோதலுக்கு வித்திட்ட கம்போங் சுங்கை பாரு நிலப்பகுதிக்கு சொந்தமானவர்களுக்கு இதுவரையில் 62.57 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாக அப்பகுதியை மேம்படுத்தவிருக்கும் மேம்பாட்டாளர் நிறுவனமான கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாகத் தலைமை அதிகாரி டாக்டர் கைருல் நிஸாம் ஒத்மான் தெரிவித்தார்.

1960 ஆம் ஆண்டு நில ஆர்ஜீத சட்டத்தின் கீழ் கூட்டரசு பிரதேச நில மற்றும் கனிம வள இலாகா, இந்த இழப்பீட்டை மதிப்பீடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

110 யூனிட்டுகள், 72 அடுக்குப் பகுதிகள், 37 தரை வீடுகள், தெனாகா நேஷனல் பெர்ஹாட்டுக்குச் சொந்தமான ஒரு துணை மின் நிலையம் ஆகியவை அப்பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக அவர் விவரித்தார்.

நிலத்தின் மதிப்பு, பராமரிப்பு உரிமை, இடம் மாறிச் செல்வதற்கான செலவினம், தற்காலிமாக தங்கியிருப்பதற்கான வாடகை, வருமான இழப்பு, வழக்கிற்கு ஆஜராகிய செலவினம் முதலியவை இந்த இழப்பீட்டில் கருத்தில் கொள்ளப்பட்டதாக டாக்டர் கைருல் நிஸாம் விவரித்தார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்