Mar 23, 2026
Thisaigal NewsYouTube
தலைநகர் நோக்கி 29 லட்சம் வாகனங்கள்: நெரிசலில் சிக்கிய நெடுஞ்சாலைகள்
தற்போதைய செய்திகள்

தலைநகர் நோக்கி 29 லட்சம் வாகனங்கள்: நெரிசலில் சிக்கிய நெடுஞ்சாலைகள்

Share:

ஹரி ராயா விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் கோலாலம்பூர் திரும்பத் தொடங்கியுள்ளதால், இன்று நள்ளிரவுக்குள் சுமார் 29 லட்சம் வாகனங்கள் நகருக்குள் நுழையுமென நெடுஞ்சாலை வாரியமான LLM மதிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக் கரைப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்து மந்தமாக உள்ளது. கோப்பெங் - தாப்பா மற்றும் சங்காட் ஜெரிங் பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகள் நெரிசலை மேலும் அதிகரித்துள்ளன.

இந்தப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரதான நெடுஞ்சாலைகளில் 30 ‘ஸ்மார்ட் லேன்கள்’ செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன LLM அறிவித்துள்ளது.

Related News