Feb 4, 2026
Thisaigal NewsYouTube
எல்லை நிர்ணயம் இழப்பீட்டின் அடிப்படையில் அல்ல, ஒப்பந்தங்களின்படியே: பிரதமர் அன்வார் விளக்கம்
தற்போதைய செய்திகள்

எல்லை நிர்ணயம் இழப்பீட்டின் அடிப்படையில் அல்ல, ஒப்பந்தங்களின்படியே: பிரதமர் அன்வார் விளக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.04-

மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான எல்லை நிர்ணயம் என்பது இழப்பீடு அல்லது லாபத்தின் அடிப்படையில் அமையாமல், 1891 மற்றும் 1915-ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட பிரிட்டிஷ்-டச்சு எல்லை உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் இன்று விளக்கமளித்தார்.

இதன் மூலம் Sinapat மற்றும் Sesai ஆகிய நதிப் பகுதிகளில் மலேசியாவிற்குக் கூடுதலாக 7.8 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வரலாற்று ரீதியாக இந்தோனேசியாவின் நிர்வாகத்தில் இருந்த சில பகுதிகள் குறித்து 1977-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, தற்போது இந்த உடன்படிக்கைகளின் படி எல்லைகள் இறுதிச் செய்யப்பட்டுள்ளன.

இந்த எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சபா மற்றும் சரவாக் மாநில அரசுகள் முழுமையாக உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், சபா முதலமைச்சர் அலுவலகம் மற்றும் நில அளவைத் துறையின் ஒப்புதல் இன்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

சுமார் 2,064 கி.மீ நீளமுள்ள மலேசியா-இந்தோனேசியா நில எல்லைப் பிரச்சனைகளைத் தீர்க்கும் இந்த முக்கிய முடிவுகள், கடந்த 2025 பிப்ரவரி 18 அன்று நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டு எல்லைக் குழுக் கூட்டத்தில் இறுதி நிலையை எட்டியுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கம் அளித்தார்.

Related News

முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் கைதி சிலாங்கூர் சுல்தானுடன் சந்திப்பு: நெகிழ்ச்சியான தருணம்

முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் கைதி சிலாங்கூர் சுல்தானுடன் சந்திப்பு: நெகிழ்ச்சியான தருணம்

உணவக ஊழியரை முட்கரண்டியால் தாக்கிய பெண்: 11,800  ரிங்கிட் அபராதம் விதிப்பு

உணவக ஊழியரை முட்கரண்டியால் தாக்கிய பெண்: 11,800 ரிங்கிட் அபராதம் விதிப்பு

மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்: மைத்துனரின் வீட்டிற்குத் தீ வைத்த நபர்

மனைவி விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்: மைத்துனரின் வீட்டிற்குத் தீ வைத்த நபர்

உலு சிலாங்கூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: நபர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்

உலு சிலாங்கூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: நபர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்

ஜோகூரை  நடுங்க வைத்த கொடூரம்: செம்பனைத் தோட்டத்தில் 6 மனித எலும்புக்கூடுகள் - இரு இந்தியச் சகோதரர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஜோகூரை நடுங்க வைத்த கொடூரம்: செம்பனைத் தோட்டத்தில் 6 மனித எலும்புக்கூடுகள் - இரு இந்தியச் சகோதரர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு

மீதமுள்ள உணவுகளைக் கழுவி மீண்டும் பயன்படுத்திய குற்றச்சாட்டு: சர்ச்சைக்குள்ளான உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட சுகாதாரத்துறை உத்தரவு

மீதமுள்ள உணவுகளைக் கழுவி மீண்டும் பயன்படுத்திய குற்றச்சாட்டு: சர்ச்சைக்குள்ளான உணவகத்தை இரண்டு வாரங்களுக்கு மூட சுகாதாரத்துறை உத்தரவு