Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பொம்மைக்குள் தோட்டாக்கள்: இரகசிய இடத்தில் துப்பாக்கி, போதைப் பொருள் - இரு வெளிநாட்டினர் அதிரடி கைது!
தற்போதைய செய்திகள்

பொம்மைக்குள் தோட்டாக்கள்: இரகசிய இடத்தில் துப்பாக்கி, போதைப் பொருள் - இரு வெளிநாட்டினர் அதிரடி கைது!

Share:

புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர்.21-

பினாங்கு, பிறையில் உள்ள ஒரு கொள்கலன் பட்டறையில் இன்று அதிகாலை 1 மணியளவில் அதிரடியாக நுழைந்த காவற்படையினர், துப்பாக்கி, தோட்டாக்கள், கட்டுக் கட்டாகப் போதைப் பொருட்களைப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து இரண்டு வெளிநாட்டினரை மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரது கால்சட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த revolver 0.38 வகைத் துப்பாக்கியையும், அங்கிருந்த ஒரு பொம்மைக்குள் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருந்த 21 தோட்டாக்களையும் கண்டு காவற்படையினர் அதிர்ச்சியடைந்தனர்.

சோதனையின் போது methamphetamine, கஞ்சா உள்ளிட்ட சுமார் ஒரு கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருட்களுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நிசான் அல்மேரா காரையும் பறிமுதல் செய்ததாக செபராங் பிறை தெங்கா மாவட்டக் காவற்படைத் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார். பயங்கர ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தல் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைதான இருவரும் வரும் டிசம்பர் 27-ஆம் தேதி வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படவுள்ளனர்.

Related News

"காட்டை அழிக்காதே, சாலையை மாற்றேன்!" - ஷா ஆலமில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் போராட்டம்!

"காட்டை அழிக்காதே, சாலையை மாற்றேன்!" - ஷா ஆலமில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் போராட்டம்!

முத்திரை வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்! தவறுகள் செய்தாலும் அபராதம் இல்லை - எல்எச்டிஎன் அதிரடி அறிவிப்பு!

முத்திரை வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்! தவறுகள் செய்தாலும் அபராதம் இல்லை - எல்எச்டிஎன் அதிரடி அறிவிப்பு!

மிரட்டும் 2-வது அலை: 5,000 வீரர்கள் தயார் - இப்போதே தயாராகுங்கள் மக்களே என எஸ்பிஎம் அதிரடி எச்சரிக்கை!

மிரட்டும் 2-வது அலை: 5,000 வீரர்கள் தயார் - இப்போதே தயாராகுங்கள் மக்களே என எஸ்பிஎம் அதிரடி எச்சரிக்கை!

"இது ஒன்றும் உணவகம் அல்ல, மக்களின் வீடு!" - சுங்கை பாரு விவகாரத்தில் ஜோஹாரி அப்துல் கானி ஆவேசம்!

"இது ஒன்றும் உணவகம் அல்ல, மக்களின் வீடு!" - சுங்கை பாரு விவகாரத்தில் ஜோஹாரி அப்துல் கானி ஆவேசம்!

சீன ஆடவர்கள் இருவரை எல்லையிலேயே தடுத்துத் திருப்பி அனுப்பிய ஏகேபிஎஸ்!

சீன ஆடவர்கள் இருவரை எல்லையிலேயே தடுத்துத் திருப்பி அனுப்பிய ஏகேபிஎஸ்!

நள்ளிரவில் பறந்த 'சூப்பர்மேன்கள்': 9 இளைஞர்கள் காவற்படை பிடியில் சிக்கினர்!

நள்ளிரவில் பறந்த 'சூப்பர்மேன்கள்': 9 இளைஞர்கள் காவற்படை பிடியில் சிக்கினர்!