Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு: மக்கள் பீதி
தற்போதைய செய்திகள்

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு: மக்கள் பீதி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு நிகழ்ந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, ஜாலான் போனஸ் சாலையில் மேற்பரப்பில் ஆழமான குழி ஏற்பட்டது. கோலாலம்பூர் மாநகர் மன்ற திட்டமிடலின் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி இந்த நில அமிழ்வு இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

குழி ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம், Air Selangor, Indah Water Konsortium மற்றும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு Lorong Masjid India 4 இல் தொடங்கி, நில அமிழ்வு ஏற்பட்ட பகுதி வரை ஜாலான் மஸ்ஜிட் இந்தியா சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாகனங்களும் வேறு சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.

மழை காலத்தில் பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்