Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு: மக்கள் பீதி
தற்போதைய செய்திகள்

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு: மக்கள் பீதி

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு நிகழ்ந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, ஜாலான் போனஸ் சாலையில் மேற்பரப்பில் ஆழமான குழி ஏற்பட்டது. கோலாலம்பூர் மாநகர் மன்ற திட்டமிடலின் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி இந்த நில அமிழ்வு இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

குழி ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம், Air Selangor, Indah Water Konsortium மற்றும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு Lorong Masjid India 4 இல் தொடங்கி, நில அமிழ்வு ஏற்பட்ட பகுதி வரை ஜாலான் மஸ்ஜிட் இந்தியா சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து வகையான வாகனங்களும் வேறு சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.

மழை காலத்தில் பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு: மக்கள் பீதி | Thisaigal News