கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையின் 66.2 ஆவது கிலோமீட்டரில் பெந்தோங் டோல் சாவடிக்கு அருகில் மண் புதையுண்டு, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த கிழக்கரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலையின் இரு வழித்தடங்களும் அனைத்து போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. குவாந்தானிலிருந்து கோலாம்பூரை நோக்கி வருகின்ற வாகனமோட்டிகள் பெந்தொங் திமுர் சாலை சந்திப்பில் நுழைந்து, பெந்தொங் பாராட் சாலையில் வெளியேறி முதன்மை நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு அந்த நெடுஞ்சாலையின் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமான அனிஹ் பெர்ஹட் அறிவித்துள்ளது.
அதேவேளையில் கோலாலம்பூரிலிருந்து குவந்தானுக்கு செல்லவிருக்கும் வாகனமோட்டிகள் சி.எஸ்.ஆர் எனப்படும் சென்ட்ரல் பைன் ரோட் சாலையை பயன்படுத்துமாறு ஆலோசனை கூறியுள்ளது. நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள அந்தப் பள்ளம் குறித்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதால் மாற்று சாலைகளை பயன்படுத்துமாறு வாகனமோட்டிகளை அனிஹ் பெர்ஹட் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


