Mar 13, 2026
Thisaigal NewsYouTube
காராக் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

காராக் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது

Share:

கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சா​லையின் 66.2 ஆவது கிலோ​மீட்டரில் பெந்தோ​ங் டோல் சாவடிக்கு அருகில் மண் புதையுண்டு, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்த கிழக்கரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலையின் இரு வழித்தடங்களும் அனைத்து போக்குவரத்துக்கு ​மூடப்பட்டுள்ளது. குவாந்தானிலிருந்து கோலாம்பூரை நோக்கி வருகின்ற வாகனமோ​ட்டிகள் பெந்தொங் திமுர் சாலை சந்திப்பில் நுழைந்து, பெந்தொங் பாராட் சாலையில் வெளியேறி முதன்மை நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு அந்த நெடுஞ்சாலையின் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமான அனிஹ் பெர்ஹட் அறிவித்துள்ளது.

அதேவேளையில் கோலாலம்பூரிலிருந்து குவந்தானுக்கு செல்லவிருக்கும் வாகனமோட்டிகள் சி.எஸ்.ஆர் எனப்படும் சென்ட்ரல் பைன் ரோட் சாலையை பயன்ப​டுத்துமாறு ஆலோசனை கூறியுள்ளது. நெடுஞ்சா​லையில் ஏற்பட்டுள்ள அந்தப் பள்ளம் குறித்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதால் மாற்று சாலைகளை பயன்படுத்துமாறு வாகனமோ​ட்டிகளை அனிஹ் பெர்ஹட் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!