மலேசியாவின் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிவாயு விநியோகம் பெரும்பாலும் உள்நாட்டு மூலங்களிலிருந்தே பெறப்படுவதால், தற்போதைக்கு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏதுமில்லை என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோ சாங் லி காங் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் சுமார் 80 விழுக்காடு உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைக் கொண்டே ஆதரிக்கப்படுகிறது. இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் மலேசியாவிற்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், கேஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி அஸ்லி முகமது கூறுகையில் , மின் உற்பத்திக்குத் தேவையான எரிவாயுவை 'பெட்ரோனாஸ்' நிறுவனத்திடமிருந்து போதிய அளவில் பெற்று வருவதால் எவ்வித விநியோகத் தடையுமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.








