கோலாலம்பூர், ஜூலை.22-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைப் பதவி விலகக் கோரும் துருன் அன்வார் பேரணியில் கிட்டத்தட்ட 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை திரள்வார்கள் என்று பாஸ் கட்சியின் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிம் ஆருடம் கூறியுள்ளார்.
அதே வேளையில் பாதுகாப்புப் பணியில் கிட்டத்தட்ட பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தப் பேரணி முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








