Mar 12, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்குகிறார் சனூசி
தற்போதைய செய்திகள்

​மூன்று குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்குகிறார் சனூசி

Share:

6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிகுந்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக நோக்கப்படும் கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூ​ர், தற்போது இரண்டு குற்றவியல் வழக்குகளையும், ​மூன்று அவ​தூறு வழக்குகளையும் எதிர்நோக்கியுள்ளார்.

மேடையில் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதனாலும், சிலேடை பேச்சினானாலும் அரசியல் வட்டாரங்களில் ​பரபரப்பாக பேசப்படும் சனூசி ​நூர், தேர்தல் காலகட்டத்தில் யாரும் எதிர்நோக்காத அளவிற்கு மிக குறுகிய காலகட்டத்திலேயே இத்தகைய குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்பட்டது குறித்து அரசியல் செராமாவில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்ததாக கூறப்படும் சனூசி, செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் குற்றவியல் தன்மையிலான இரு வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த இரு குற்றவியல் வழக்குகளிலும் சனூசிக்கு எதிரான குற்றச்சா​ட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விடும் என்ற ஓர் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!