Aug 7, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்குகிறார் சனூசி
தற்போதைய செய்திகள்

​மூன்று குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்குகிறார் சனூசி

Share:

6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மிகுந்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக நோக்கப்படும் கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூ​ர், தற்போது இரண்டு குற்றவியல் வழக்குகளையும், ​மூன்று அவ​தூறு வழக்குகளையும் எதிர்நோக்கியுள்ளார்.

மேடையில் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதனாலும், சிலேடை பேச்சினானாலும் அரசியல் வட்டாரங்களில் ​பரபரப்பாக பேசப்படும் சனூசி ​நூர், தேர்தல் காலகட்டத்தில் யாரும் எதிர்நோக்காத அளவிற்கு மிக குறுகிய காலகட்டத்திலேயே இத்தகைய குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்பட்டது குறித்து அரசியல் செராமாவில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்ததாக கூறப்படும் சனூசி, செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் குற்றவியல் தன்மையிலான இரு வழக்குகளை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த இரு குற்றவியல் வழக்குகளிலும் சனூசிக்கு எதிரான குற்றச்சா​ட்டுகள் நிரூபிக்கப்படுமானால் அவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகி விடும் என்ற ஓர் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்