பெட்டாலிங் ஜெயா, மார்ச்.07-
செபூத்தே எம்.பி. திரேசா கொக்கின் முன்னாள் சிறப்பு அதிகாரியும், மற்றொரு நபரும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் நட்புறவு திட்டத்திற்கான பிரத்தியேக நிதியை அங்கீகரித்து, உதவுவதில் கைமாறாக தங்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் லஞ்சப் பணமாக வழங்க வேண்டும் என்று கேட்டுப், பெற்றதாக அந்த இருவருக்கு எதிராக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
30 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் நேற்று முன்தினம் புதன்கிழமை புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்விருவரும் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மார்ச் 9 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.







