பினாங்கு தீவில் நிர்மாணிக்கப்படவிருக்கும் எல்ஆர்டி ரயில் திட்டம், செபராங் பிறை பெருநிலத்தையும் இணைப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இணக்கம் தெரிவத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
தொடக்கத்தில் பாயான் லெபாஸ்ஸிலிருந்து ஜார்ஜ்டவுன், கொம்தார் வரையில் மட்டுமே எல்ஆர்டி நிர்மாணிக்கப்படுவதற்கு புத்ராஜெயா அனுமதி அளித்து இருந்த்தாக அந்தோணி லோக் குறிப்பிட்டு இருந்தார்.
எனினும் எல்ஆர்டி ரயில் திட்டம் பினாங்கு தீவில் மட்டும் மேற்கொள்ளாமல், அத்திட்டம் பினாங்கு, செபராங் பிறை பெருநிலத்தையும் இணைக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரான பிரதமர் இத்திட்டத்திற்கு முழு ஆதரவை நல்கியிருப்பதால் பினாங்கு மாநிலத்தில் எல்ஆர்டி ரயில் திட்டம், பினாங்கு தீவிலிருந்து பெரு நிலம் வரை பாயும் என்று அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


