Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அடுத்த வாரம் திறக்கப்படுகிறது

Share:

கோம்பாக், மார்ச்.04-

கிழக்குக் கரை மாநிலங்களுக்கான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை கோலாலம்பூருடன் இணைக்கும் கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமான TBG, அடுத்த வாரம் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எனினும் ஆகக் கடைசியாக நடைபெறும் பரீட்சார்த்த சோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டு அந்த பிரதான போக்குவரத்து முனையத்தின் செயலாக்கம் தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஹரிராயாவை முன்னிட்டு கிழக்குக் கரை மாநிலங்களுக்கு செல்கின்றவர்கள் அந்த முனையத்தை பயன்படுத்த முடியும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திலிருந்து கோலாலம்பூருக்கு LRT ரயில் சேவை, கோம்பாக் LRT ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு