Aug 10, 2026
Thisaigal NewsYouTube
21 வயது ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

21 வயது ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.14-

கடந்த வாரம் சிரம்பானில் 16 வயது இளம் பெண் கடத்தப்பட்டதற்குப் பொறுப்பானவன் என்று நம்பப்படும் 21 வயது இளைஞரை போலீசார் இன்று காலையில் சுட்டுக் கொன்றனர்.

கிள்ளான், புக்கிட் திங்கியில் நடந்த அதிரடித் தாக்குதலில் அந்த இளைஞர் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே வேளையில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேலும் சில ஆடவர்களைக் கைது செய்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை துணை இயக்குநர் பாஃடில் மார்சுஸ் தெரிவித்தார்.

அந்த இளம் பெண் கடத்தப்பட்டு, 20 லட்சம் ரிங்கிட் பிணைப் பணம் கோரப்பட்டது தொடர்பில், பிணைப் பணத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் குடும்பத்தினரால் செலுத்தப்பட்டுள்ளது.

தவிர தங்களிடம் இருந்த நகைகளையும் கடத்தல்காரிகளிடம் குடும்பத்தினர் ஒப்படைத்துள்ளனர். இவற்றைப் பெற்றுக் கொண்டு அந்த இளம் பெண்ணைக் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர் என்று பாஃடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.

கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த இடத்தில் போலீசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் அவர்கள் பெற்ற பிணைப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்று இன்று நடைபெற்ற செய்திளார்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி புரோட்டோன் வீரா காரில் பயணித்த வேளையில் அந்நபரைத் துரத்திக் கொண்டு போலீசார் சென்ற வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் நிழ்ந்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

21 வயது ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார் | Thisaigal News