Mar 19, 2026
Thisaigal NewsYouTube
40 ஆண்டுகள் சேவை: ஓய்வு பெற்ற விமானப் படைத் தளபதிக்கு மாமன்னர் வாழ்த்து!
தற்போதைய செய்திகள்

40 ஆண்டுகள் சேவை: ஓய்வு பெற்ற விமானப் படைத் தளபதிக்கு மாமன்னர் வாழ்த்து!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.24-

மலேசிய மாமன்னர் மேன்மை தங்கிய சுல்தான் இப்ராஹிமை, ஓய்வு பெற்ற முன்னாள் மலேசிய விமானப் படைத் தளபதி டான் ஶ்ரீ முகமட் அஸ்கார் கான் கொரிமான் கான் Tan Sri Mohd மரியாதை நிமித்தமாக நேற்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.

கடந்த ஜூன் மாதம் முகமட் அஸ்கார் கான் ஓய்வு பெற்றதை முன்னிட்டு இச்சந்திப்பு நடைபெற்றதாக மாமன்னரின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக மலேசிய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள முகமட் அஸ்கார் கானுக்கு மாமன்னர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் பிறந்தவரான முகமட் அஸ்கார் கான், கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மலேசிய விமானப் படையில் தலைமைப் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை