Mar 24, 2026
Thisaigal NewsYouTube
சைக்கிளோட்டப் போட்டியின் போது பங்கேற்பாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

சைக்கிளோட்டப் போட்டியின் போது பங்கேற்பாளர் மரணம்

Share:

காஜாங், ஆகஸ்ட்.11-

சைக்கிளோட்டப் போட்டியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர் ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவு நெடுஞ்சாலையான இகேவிஇயில் EKVE-யில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் 27 வயதுடைய சைக்கிளோட்டி 50 கிலோமீட்டர் தூரத்திலான சைக்கிளோட்டிப் போட்டியில் பங்கேற்ற போது 13 ஆவது கிலோமீட்டரில் அவர் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.

Related News