மலேசியாவின் சில பகுதிகளில் உள்ள ஷெல் எரிபொருள் நிலையங்களில் ஏற்பட்டுள்ள எண்ணெய் தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அரசாங்கத்தின் அண்மைய அறிவிப்பைத் தொடர்ந்து, குறுகிய காலத்தில் எரிபொருளுக்கான தேவை திடீரென அதிகரித்ததே இந்தத் தற்காலிகத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என ஷெல் தெரிவித்துள்ளது.
எனினும் நடப்பு நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் என்று அந்த எண்ணெய் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.








